காணொளி: சென்னையில் பள்ளி மாணவர் கொலையில் நடந்தது என்ன?

காணொளி: சென்னையில் பள்ளி மாணவர் கொலையில் நடந்தது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

சென்னையில் பிளஸ் 2 மாணவர் ஒருவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் தற்போது வரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பலரும் இளஞ்சிறார்கள் என்பதால் சிறார் நீதிக்குழுமத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக, காவல்துறை தெரிவித்துள்ளது.

மாணவர்கள் கஞ்சா பயன்படுத்தியதைத் தட்டிக் கேட்டதால் தன் மகன் கொல்லப்பட்டதாக, இறந்த மாணவரின் தந்தை வெங்கடேசன் கூறுகிறார்.

"ஆனால், மாணவரின் இறப்புக்கு போதைப் பயன்பாடு காரணமாக இல்லை" என, திருவொற்றியூர் உதவி ஆணையர் (பொறுப்பு) பிரம்மானந்தம் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

பள்ளி வளாகங்களில் இதுபோன்ற சம்பவம் நடக்காமல் இருக்கும் வகையில் வழிகாட்டும் நெறிமுறைகள் பின்பற்றப்பட உள்ளதாக, சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவத்தில் என்ன நடந்தது? இந்தக் காணொளியில் தெரிந்து கொள்ளலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு