You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: தொழிலார்களுக்கு கிடைத்த 16 கேரட் வைரம் - மதிப்பு என்ன தெரியுமா?
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஏழு தொழிலாளர்கள் 16.96 கேரட் எடையுள்ள இந்த வைரத்தைக் கண்டெடுத்துள்ளனர். பன்னா மாவட்டத்தில் உள்ள சர்கோஹா கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட, பச்சை நிறம் கொண்ட இந்த வைரத்தின் தற்போதைய மதிப்பு சுமார் ₹50 லட்சம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது, ஏழு பேர் இணைந்து இந்த வைரத்திற்கு உரிமையாளர்களாக உள்ளனர். நிலத்தை குத்தகைக்கு எடுத்து அங்கு வைரங்களைத் தேடுவதற்காக அவர்கள் தங்கள் பணத்தை ஒன்றிணைத்திருந்தனர். இவர்களில் மூவர் கூட்டாளிகள் ஆவர்; மோசமான நிதி நிலைமை காரணமாக அவர்களால் திருமணம் செய்துகொள்ள முடியாமல் இருந்தது.
இந்த வைரத்தின் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு, நிரந்தர வீடுகளைக் கட்டவும், தங்கள் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணச் செலவுகளை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளதாகத் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
இந்த வைரம் அரசு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஏலத்திற்குப் பிறகு, நிர்வாகம் அதற்கான ராயல்டி (அரசுக்கான பங்கு) தொகையைக் கழித்துவிட்டு, மீதமுள்ள தொகையை அந்த ஏழு பேருக்கும் பிரித்து வழங்கும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு