காணொளி: அரசு அலுவலர்கள் மீது டீசல் தெளித்த நபர்

காணொளி: அரசு அலுவலர்கள் மீது டீசல் தெளித்த நபர்
பிரசுரிக்கப்பட்டது

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியைச் சேர்ந்த 35 வயதான ராம்கி, நிலத்துக்கு பட்டா வழங்கக் கோரி, கடந்த 5 மாதங்களாக அரசு அலுவலகத்துக்கு அலைந்ததாகவும், நடவடிக்கை எடுக்கப்படாததால் அலுவலர்கள் மீது டீசல் தெளித்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்தவர்கள், ராம்கியை சூழ்ந்து தடுத்து தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தில் சன்னாநல்லூர் கிராம நிர்வாக அலுவலர் விஜய்க்கு காயம் ஏற்பட்ட நிலையில், அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு