You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வீட்டுக்குள் நுழைய முயன்ற ராட்சத மலைப்பாம்பை ஒருவர் தடுக்க போராடிய காட்சி
வீட்டுக்குள் நுழைய முயன்ற ராட்சத மலைப்பாம்பை ஒருவர் தடுக்க முயலும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
இந்தச் சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் நடந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி, மீரட்டில் உள்ள ஹசன்பூர் காதிம் கிராமத்துக்குள் சுமார் 10 முதல் 12 அடி நீளமுள்ள ராட்சத மலைப்பாம்பு ஒன்று நுழைந்தது. குடியிருப்புப் பகுதிக்குள் மலைப்பாம்பு வந்ததைக் கண்டு அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.
இதனிடையே, அந்தப் பாம்பு ஒரு வீட்டுக்குள் நுழைய முயன்றுள்ளது. வனத்துறைக்குத் தகவல் கிடைத்தவுடன், அப்பகுதிக்கு ஒரு குழு அனுப்பப்பட்டதாக மண்டல வனத்துறை அதிகாரி ரவிகாந்த் கூறினார். குழுவினர் மலைப்பாம்பை பாதுகாப்பாக மீட்டு, மீரட்டின் ஹஸ்தினாபூர் வனச்சரகம் பகுதியில் பத்திரமாக விடுவித்தனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு