You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'அந்த ஆவணங்களை திறந்து பாருங்க' - விஜய்க்கு உதயநிதி சவால்
திமுக மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளதாகக் கூறப்படும் 3 கோப்புகள் முதல்வரின் மேசையில் இருப்பதாகக் கூறப்பட்ட விவகாரத்தில், உண்மையான குற்றச்சாட்டு மற்றும் ஆதாரங்கள் இருந்தால் அவற்றை உடனடியாகத் திறந்து நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் சவால் விடுத்தார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் விஜய் 3 துறைகள் தொடர்பான கோப்புகள் தனது மேசையில் இருப்பதாகவும் , அதை திறக்க வைத்து விடவேண்டாம் எனவும் கூறினார்.
இந்த பின்னணியில், சட்டப்பேரவையில் தற்போது இந்த பிரச்னையை எழுப்பிய உதயநிதி ஆதாரம் இருந்தால் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பினார். அவருக்கு பதிலளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு