You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'இரவு 8 மணிக்குதான் கொள்கை விளக்க குறிப்பு வருது' - பழனிசாமி பேசியது என்ன?
ஒவ்வொரு துறை சார்ந்த அரசின் கொள்கை விளக்க குறிப்பு புத்தகங்கள் இரவு தாமதமாக கிடைப்பதாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து கூறிவரும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் இன்று அதே கருத்தை முன்வைத்தார். அவரது கருத்தை ஏற்றுக்கொண்ட அவைத் தலைவர் ஜேசிடி பிராபகர் கொள்கைவிளக்க குறிப்புகளை குறைந்தது 24 மணி நேரத்திற்கு முன் வழங்கவேண்டும் என வலியுறுத்தினார்.
கொள்கை விளக்க குறிப்பு என்றால் என்ன?
ஒவ்வொரு துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது அந்தத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பு உறுப்பினர்களுக்கு வழங்கப்படும். கொள்கை விளக்கக் குறிப்பு என்பது ஒவ்வொரு துறையும் தங்களது கடந்த ஆண்டின் செயல்பாடுகள், தற்போதைய திட்டங்கள், புதிய அறிவிப்புகள், நிதி ஒதுக்கீடுகள் மற்றும் எதிர்கால இலக்குகள் குறித்து சட்டப்பேரவைக்கு சமர்ப்பிக்கும் அதிகாரப்பூர்வ ஆவணமாகும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு