You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட திமுக எதிர்ப்பு
பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படுவதாக முதலமைச்சர் விஜய் வெளியிட்ட அறிவிப்பு குறித்து திமுக பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படும் என தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் அறிவித்தார். அப்போது பரந்தூர் தொடர்பாக திமுக சார்பில் அளிக்கப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தை அவைத் தலைவர் எடுத்துக்கொள்ளவில்லை எனக் கூறி திமுக உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, திட்டம் கைவிடப்பட்டது குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு