You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கல்பனா சாவ்லா விருது வென்ற நெளஷீன் பானு பேட்டி
தமிழ்நாடு அரசு ஒவ்வோர் ஆண்டும் வழங்கும் துணிவு மற்றும் சாகசச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருது கோயம்புத்தூரைச் சேர்ந்த மாரத்தான் வீராங்கனையான நௌஷீன் பானு சந்த் என்பவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
இவர் குறைந்த ஆக்சிஜன், குளிர் மற்றும் கரடு முரடான இமயமலைப் பகுதியின் கடுமையான சவால்களை எதிர்கொண்டுள்ளார் என தமிழ்நாடு அரசின் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"2024 முதல் 2026 வரை தொடர்ந்து மூன்று ஆண்டுகள் 'டென்சிங் ஹிலாரி எவரெஸ்ட் மாரத்தான்' (42 கி.மீ) போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்து ஹாட்ரிக் சாதனை படைத்த முதல் பெண் வீராங்கனை என்ற பெருமைக்குரியவர்," என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு